.webp)
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மாகாண சபையின் கடிதத் தலைப்பினை பயன்படுத்தி முன்பள்ளிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாவை திரட்டி அதனை தனது பெயரில் காசோலையூடாக மாற்றிக் கொண்டதாக முன்வைத்த குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.