.webp)
Colombo (News 1st) மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
"நாம் 200'' தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மலையக இளைஞர் மாநாடு நடத்தப்படவுள்ளது.
கண்டியில் மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சரவை போச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
பெருந்தோட்டங்களில் வாழும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.