சிரில் ரமபோசா ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு

தென்னாபிரிக்க ஜனாதிபதியாக சிரில் ரமபோசா இரண்டாவது முறையாக தெரிவு

by Bella Dalima 15-06-2024 | 4:41 PM

Colombo (News 1st) ​தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 30 வருடங்களின் பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 40% வாக்குகளை பெற்று பெரும்பான்மையை இழந்தது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதில் சிக்கலை எதிர்கொண்டிருந்த ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தற்போது கூட்டணி அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இதன் ஊடாக தற்போதைய ஜனாதிபதி சிரில் ரமபோசா  இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் தனது ஆதிக்கத்தை இம்முறை தேர்தலில் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 18 கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளன.

இதன்படி, 40% வாக்குகளை பெற்றுள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரில் ரமபோசா, நேற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.