.webp)
சர்வதேச இரத்த தான தினம் இன்றாகும்.
சர்வதேச இரத்த தான தினம் ஆரம்பிக்கப்பட்டு இன்று(14)டன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
கொடையாளர்களுக்கு நன்றி எனும் தொனிப்பொருளில் இந்தமுறை இரத்த தான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பசியைப் போக்கும் அன்னதானத்தை மிகச்சிறந்த தானமாகக் கருதுவதைப் போன்று ஒருவரின் உயிரைக் காப்பதற்கு உதவும் வகையில் கொடுக்கப்படும் இரத்த தானமும் மிகச்சிறந்த தானமாகவே போற்றப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் இரத்த தானம் செய்வோரை கௌரவிக்கும் விதமாக இன்றைய தினத்தை சர்வதேச இரத்த தானம் வழங்குவோர் தினமாக அறிவித்தது.
உலகம் விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.