.webp)
Colombo (News 1st) பாதுகாப்பற்ற தொழிலாளர் இடம்பெயர்விற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை உச்சி மாநாடு இன்று(13) காலை இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் ஆரம்பமானது.
ஆசிய - பசுபிக் வலய அமைச்சு மட்ட பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரபல வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக ஆசிய பசுபிக் வலயத்தில் முன்னணியாக செயற்படும் அமைப்பே பாலி மாநாடாகும்.
அரசாங்கம் மற்றும் வணிக உச்சி மாநாடு அதன் செயற்பாட்டிலுள்ள முதன்மையான பேச்சுவார்த்தை தளமாக கருதப்படுகிறது.
பாதுகாப்பற்ற தொழிலாளர் குடியேற்றத்தை ஒழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை உச்சி மாநாட்டை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமம் மற்றும் கம்மெத்த ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் பில்லியனர் வர்த்தகர், கலாநிதி அன்ட்ரூ பொரஸ்ட் மற்றும் இந்தோனேஷியாவின் பில்லியனர் வர்த்தகர் ஷெரிபோல்ட் நோஹீர் உள்ளிட்டோர் மாநாட்டின் இணைத் தலைவர்களாக செயற்படுவதுடன் மாநாட்டுக்கான இலங்கையின் தலைவராக கம்மெத்த தலைவர் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளர் ஷெவான் டெனியல் செயற்படுகிறார்.
இன்று காலை ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில் வலய நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.