.webp)
Kuwait: குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 42 பேர் இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் (Mangaf) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (12) அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.
முன்னதாக 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயமடைந்தவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
50 பேர் வரையில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.