ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

ஆந்திர முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

by Bella Dalima 12-06-2024 | 3:17 PM

Colombo (News 1st) இந்தியாவின் ஆந்திர மாநில முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார். 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா விஜயவாடா அருகே பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் மேலும் 23 பேரும் அமைச்சர்களாக இதன்போது பதவியேற்றனர்.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 

இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற அவை தலைவராக சந்திரபாபு நாயுடு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.