கிளிநொச்சியில் 1700 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன

by Bella Dalima 25-05-2024 | 7:46 PM

Colombo (News 1st) “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி இரணைமடுவில் இன்று (25) நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகங்களை  உள்ளடக்கி, 1700 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் P.S.M. சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்தன், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கி "உரித்து" வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 13,858 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, வட மாகாணத்தில் சேவையாற்றுவதற்கு, 375 பேருக்கு ஆசிரியர் நியமனங்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், தந்தை செல்வா அரங்கில் இந்நிகழ்வு  நடைபெற்றது.