இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக எஸ்.சிறீதரன் தெரிவு

by Staff Writer 21-01-2024 | 2:21 PM

Colombo (News 1st) திருகோணமலையில் இன்று(21) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S.சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டிருந்தனர்.