கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

by Bella Dalima 08-12-2023 | 3:04 PM

Colombo (News 1st) அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை (09) மாலை 05 மணி முதல் நாளை மறுதினம் (10) காலை 09 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.