.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அனுமதி வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் நிதித் துறையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது.
இதனூடாக நாட்டின் வங்கிக் கட்டமைப்பு, நிதி கட்டமைப்பு, சிறு மற்றும் மத்திய தொழிற்துறைகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.