ஐயப்ப பக்தர்களுக்கான விசா எண்ணிக்கை அதிகரிப்பு?

ஐயப்ப பக்தர்களுக்கான விசா எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

by Staff Writer 06-12-2023 | 5:32 AM

Colombo (News 1st) ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் செல்லுபடியாகும் கால எல்லையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மாத்திரமே வழங்கப்படுவதுடன், அதன் செல்லுபடி காலம் ஒரு மாதமாக காணப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் செல்லுபடியாகும் கால எல்லையை 2 மாதங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.