.webp)
Colombo (News 1st) புசல்லாவை - கித்துல்பெத்த, பெரகல பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தமது மரக்கறி செய்கையை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த மின் கம்பியில் மோதியே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதான தந்தையும் இரண்டரை வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.