6 தொல்பொருட்கள் மீள கையளிப்பு

நெதர்லாந்து வசமிருந்த இலங்கைக்கு சொந்தமான 6 தொல்பொருட்கள் மீள கையளிப்பு

by Staff Writer 29-11-2023 | 11:26 AM

Colombo (News 1st) 150 வருடங்களுக்கு மேலாக நெதர்லாந்தின் வசமிருந்த இலங்கைக்கு சொந்தமான 6 தொல்பொருட்கள் இன்று(29) மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. 

நெதர்லாந்து தூதுவரினால் குறித்த பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.