இராணுவ உளவு செய்மதியை விண்ணுக்கு ஏவிய வட கொரியா

இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளதாக வட கொரியா அறிவிப்பு

by Staff Writer 22-11-2023 | 9:09 AM

Colombo (News 1st) இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

Malligyong-1 என பெயரிடப்பட்ட இந்த செய்மதி, துல்லியமாக சுற்றுவட்டப் பாதையில் பிரவேசித்து விட்டதாக வட கொரிய அரச ஊடகம்  தெரிவித்துள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், செய்மதியை விண்ணுக்கு செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.