.webp)

Colombo (News 1st) இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலில் திட்டவட்டமான தொழிற்சந்தை துறைகளில் தற்காலிக தொழில்களில் இலங்கையர்களை ஈடுபடுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களை ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
