.webp)
Colombo (News 1st) நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(03) சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் ஊடாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து Online செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை அமுல்படுத்த இந்த சட்டமூலத்தினூடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.