மொரவக்கயில் பல வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்தது

நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால் மொரவக்கயில் பல வீடுகளுக்குள் வௌ்ளம்

by Bella Dalima 28-09-2023 | 6:55 PM

Colombo (News 1st) நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால்  மொரவக்க  - போருபிட்டிய  பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 

போருபிட்டிய  பிரதேசத்தில் 8 வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

இதேவேளை,  தெனியாய - அக்குரஸ்ஸ பிரதான வீதியின் ஒரு சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

மொரவக்க - பரகடுவ பிரதான வீதியின் நில்வலா கங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பரகடுவ பாலத்தின் அடைப்பினை சுத்தம் செய்யும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர். 
 
மொரவக்க - நெலுவ பிரதான வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதோடு, இப்பாதையூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. 

இதேவேளை,  மொரவக்க சந்தைக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளன.