சில பகுதிகளில் கன மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் கன மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 28-09-2023 | 8:36 AM

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.