ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2023 | 12:00 pm

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமடையலாம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

கரையோர மார்க்கத்தின் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மஹவயிலிருந்து மொறட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலொன்றே இன்று(27) காலை தடம் புரண்டது.

இதனால் கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்களுக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் கொழும்பிலிருந்து வௌியேறும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என். ஜே. இதிபொலகே மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்