மதுபான போத்தல்களை ஏலத்தில் விட தீர்மானம்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம் - இலங்கை சுங்கம்

by Staff Writer 24-09-2023 | 2:34 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

வருடத்தின் ஆரம்பம் முதல் சேகரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான போத்தல்கள், அரசுடைமையில் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினால் ஏல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏலத்திற்கு விடப்படவுள்ள சட்டவிரோத மதுபான போத்தல்கள், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார்.