English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Sep, 2023 | 7:03 pm
Colombo (News 1st) இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வருகின்ற நிலையில், கம்போடியாவின் Ream என்ற இடத்திலும் கடற்படைத் தளத்தை அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாக The Hindu செய்தி வௌியிடுள்ளது.
ஆப்பிரிக்காவின் Djibouti, பாகிஸ்தானில் கராச்சி, Gwadar ஆகிய பகுதிகளில் சீன கடற்படைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனா 355 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருவாகி வருவதாக The Hindu செய்தி வௌியிடுள்ளது.
அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சீனாவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 555-ஆக அதிகரிக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2 இலட்சம் கோடி செலவில் 68 போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கு இந்திய கடற்படை முன்பதிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டளவில் இந்திய கடற்படையில் ஆகக்குறைந்தது 175 போர்க்கப்பல்கள் காணப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
28 Nov, 2023 | 09:35 PM
25 Nov, 2023 | 07:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS