விபத்தில் 6 மாத குழந்தை பலி

கண்டி - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 மாத குழந்தை பலி

by Bella Dalima 10-06-2023 | 3:30 PM

Colombo (News 1st) கண்டி - மஹியங்கனை வீதியின் குருலுபொத்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தனியார் பஸ் ஒன்று சுக்கான் செயற்படாததன் காரணமாக, மண்மேட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் 7 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து, மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, 6 மாத குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிபில பிரதேசத்தில் இருந்து யாத்திரை சென்று திரும்பியவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.