மல்லாவியில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மல்லாவியில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு; யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்

by Bella Dalima 09-06-2023 | 4:28 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு -  மல்லாவி, வடகாடு வயற்பகுதியில் இருந்து  சடலமொன்று  இன்று மீட்கப்பட்டுள்ளது.

காலையில் வயலுக்கு சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொல்லவிளாங்குளம் - வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த  4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர்  யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.