தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2023 | 7:42 pm

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (08) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

'மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதிக்கு மக்களின் கருத்தை நசுக்குவதற்கு இடமளியோம் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து' என்ற தொனிப்பொருளில் இன்று மாலை 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களும் கட்சியின் முன்வரிசை தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். 
 
ஆர்ப்பாட்டத்தினால் தேர்தல்கள் திணைக்களத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்