ஒரு வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள்

ஒரு வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

by Staff Writer 08-06-2023 | 10:49 AM

Colombo (News 1st) இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41883 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. 

வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.