மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

சூறாவளி வலுவடையக்கூடும்: மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்

by Bella Dalima 07-06-2023 | 10:04 PM

Colombo (News 1st) அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள Biparjoy சூறாவளி அடுத்த ஒரு சில மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர்  சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.