![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) கடல் நீரில் விளக்கெரியும் அற்புதத் திருத்தலமாக போற்றப்படுகின்ற வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திங்கள் பொங்கல் உற்சவம் இன்று(06) அதிகாலை இனிதே நிறைவு பெற்றது.
வட மாகாணத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற திருத்தலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் திகழ்கின்றது.
ஆலயத்தின் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, 7 நாட்களாக கடல் தீர்த்தத்தில் ஏற்றப்பட்டிருந்த விளக்கு மற்றும் மடை பண்டங்கள் என்பன காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து நேற்று(05) அதிகாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டன.
அதனையடுத்து பொங்கல் உற்சவம் ஆரம்பமானது.
நேற்று(05) நள்ளிரவு பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கான பொங்கல் நிகழ்வு பக்திபூர்வமாக நடைபெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த அதிகளவிலான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்
இன்று(06) அதிகாலை ஐயன் மடையுடன் வளிவொட்டிவிடும் நிகழ்வுடன் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திங்கள் பொங்கல் உற்சவம் நிறைவு பெற்றது.