படகு மோதியதில் ஒருவர் பலி

படகு மோதியதில் ஒருவர் பலி

by Staff Writer 04-06-2023 | 3:57 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகொன்று வேகமாக கரை திரும்பிக்கொண்டிருந்த போது கரையோரமாக சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் நேற்று முன்தினம்(02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(03) உயிரிழந்துள்ளார். 

படகினை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்