நாரஹேன்பிட்டியில் போலி ஆவணங்களை தயாரித்த நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு 3 நபர்களை கைது செய்துள்ளனர்.
நாராஹேன்பிட்டி - எல்விட்டிகல மாவத்தையிலுள்ள நிழற்படம் எடுக்கும் நிலையத்தில் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிழற்படம் எடுக்கும் நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் 260 முத்திரைகள் போலியான முறையில் தயாரிக்கப்பட்டு பிறப்புச் சான்றிதழ், வருமான வரி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை, சேவை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போலியான தகவல்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 2 கணினிகள், 2 அச்சு இயந்திரங்கள் உட்பட சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31, 43 மற்றும் 71 ஆகிய வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.