டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

by Staff Writer 01-06-2023 | 7:26 AM

Colombo (News 1st) கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.