Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகர எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(01) ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(31) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
நடாஷா எதிரிசூரிய தெரிவித்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமைக்காக புருனோ திவாகர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.