வீட்டுத் தோட்டத்தில் 50 வயதான பெண்ணின் சடலம்; 39 வயதான கணவர் கைது

வீட்டுத் தோட்டத்தில் 50 வயதான பெண்ணின் சடலம்; 39 வயதான கணவர் கைது

வீட்டுத் தோட்டத்தில் 50 வயதான பெண்ணின் சடலம்; 39 வயதான கணவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jun, 2023 | 4:23 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – விஜேராம பகுதியில்  வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 50 வயதான பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னரே பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, உயிரிழந்த பெண்ணின் 39 வயதான கணவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தற்போது அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்