Colombo (News 1st) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 10 விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை மறுதினம்(02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கிணங்க, பெலிஅத்த, காலி மற்றும் கொழும்பு கோட்டை முதல் விசேட ரயில் சேவைகள் அனுராதபுரம் நோக்கி பயணிக்கவுள்ளன.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல இடங்களுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயிலவே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.