Colombo (News 1st) சமூக செயற்பாட்டாளர் புருனோ திவாகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடாஷா எதிரிசூரியவினால் வௌியிடப்பட்ட கருத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று காலை 10 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவிற்கு வருமாறு புருனோ திவாகரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.