இழப்பீட்டு எல்லை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம்

X-Press Pearl இழப்பீட்டு எல்லையை நீக்குவதற்காக பிரித்தானிய சட்டத்தரணிகளின் உதவியை நாட தீர்மானம் - சட்ட மா அதிபர் திணைக்களம்

by Staff Writer 30-05-2023 | 12:38 PM

Colombo (News 1st) X-Press Pearl கப்பலால் இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக பிரித்தானிய நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு எல்லையை நீக்குவதற்கு அந்நாட்டு சட்டத்தரணிகளின் உதவியை நாடவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்நாட்டு சட்டத்தரணி ஒருவருடன் கலந்துரையாடி வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

அந்நாட்டு சட்டத்தரணியூடாக விடயங்களை முன்வைக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, X-Press Pearl கப்பல் தொடர்பாக இந்திய அரசு கோரிய இழப்பீட்டுத் தொகையை இலங்கைக்கான இழப்பீட்டுடன் இணைத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.