24 மணித்தியாலங்களில் விபத்துகளில் ஐவர் பலி

24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் பலி

by Bella Dalima 30-05-2023 | 4:42 PM

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, மானிப்பாய் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 29 வயதான ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - வெலிகண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் 33 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

கண்டி - கம்பளை, குருகேலே சந்தியில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அவர் விபத்திற்குள்ளாகியுள்ளார். 

புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வேன் மோதியதில் 68 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் - ஸ்வஸ்திபுர பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 76 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்தனர்.