நிலவிற்கு மனிதா்களை அனுப்ப சீனா திட்டம்

2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப சீனா திட்டம்

by Bella Dalima 30-05-2023 | 3:58 PM

CHINA: 2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரகத்திற்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பன தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என சீன விண்வெளி ஆய்வு மையத்தின் பிரிவான CMSA (China Manned Space Agency) தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும் என CMSA சுட்டிக்காட்டியுள்ளது. 

நிலவிற்கும் பூமிக்கும் இடையே சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது, நிலவில் இருப்பிடங்களை அமைத்து மனிதா்கள் தற்காலிகமாகத் தங்குவது, இயந்திர மனிதா்களுடன் மனிதா்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு 2030-இல் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம் அடித்தளம் அமைக்கும் என CMSA-இன் இணை பணிப்பாளர் லின் ஷிகியாங் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே நிலவிற்கு ஆளில்லாத விண்கலங்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. நிலவில் நகா்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓா் ஆய்வுக் கலத்தையும் சீனா வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. 

முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டில் ரஷியாவும், சீனாவும் கூட்டாக அறிவித்தன.

நிலவின் பரப்பிலோ அல்லது அதனை சுற்றி வரும் வகையிலோ அந்த சா்வதேச நிலவு ஆய்வு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

நிலவுக்கு முதன்முறையாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1968-இல் விண்வெளி வீரா்களை அனுப்பியது. பின்னா் அப்பல்லோ-11 விண்கலத்தில் அனுப்பப்பட்ட நீல் ஆா்ம்ஸ்ட்ராங்கும் புஸ் ஆல்ட்ரினும் கடந்த 1969-இல் முதன்முறையாக நிலவில் தரையிங்கினா்.

அதன் பிறகு அமெரிக்கா 6 முறை நிலவிற்கு விண்வெளி வீரா்களை அனுப்பியது. எனினும், 1972-ஆம் ஆண்டிற்கு பிறகு நிலவிற்கு மனிதா்களை அனுப்புவதை நிறுத்திய அமெரிக்கா, வரும் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த சூழலில், சீனாவும் அதுபோன்ற திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் அந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவிற்கு மனிதா்களை அனுப்பிய உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.