வவுனியா – சமளங்குளம் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

வவுனியா – சமளங்குளம் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

வவுனியா – சமளங்குளம் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2023 | 7:34 pm

Colombo (News 1st) வவுனியா – சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடையவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 
குறித்த வழக்கு விசாரணைகள்  வவுனியா மேல் நீதிமன்றத்தில்  இடம்பெற்றிருந்தன.

இவர் மீது சுமத்தப்பட்டிருந்த 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

10 ஆம்  11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு நீதிபதி மா. இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்