Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.காங்கேசன்துறை வீதியின் முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இன்று(29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீசாலையைச் சேர்ந்த 29 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மெலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.