மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த விமானத்திற்குள் பயணியொருவர் உயிரிழப்பு

மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த விமானத்திற்குள் பயணியொருவர் உயிரிழப்பு

மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த விமானத்திற்குள் பயணியொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 May, 2023 | 3:56 pm

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானமொன்றில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL 605 எனும் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே குறித்த பயணி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தை மெல்போர்ன் நகருக்கு திரும்பி அனுப்பாது, கட்டுநாயக்க வரை பயணிக்க விமானிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்