யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்

by Bella Dalima 26-05-2023 | 3:49 PM

Colombo (News 1st) இலங்கையில் இருந்து மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தின் மூவரே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 

படகு மூலம் தலைமன்னார் வழியாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையை இவர்கள் சென்றடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தஞ்சமடைந்துள்ள மூவரும் மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், தமிழக கரையோர பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.