சம்மாந்துறையில் கைகலப்பின் போது ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் கைகலப்பின் போது ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 08-04-2023 | 6:29 PM

Colombo (News 1st) சம்மாந்துறை - மலையடிகிராமம் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையில் நிர்வாக சபை தேர்வு தொடர்பில் ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

65 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் கொலையா அல்லது மரணமா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகவில்லை எனவும் பிரேத பரிசோதனையின் பின்னரே உறுதி செய்ய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.