.webp)
Colombo (News 1st) மிரிஹானயில் இன்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர்.
போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு அருகில் இன்று மாலை போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார , டானிஷ் அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.