English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Mar, 2023 | 9:22 am
Colombo (News 1st) வரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 03ஆம் திகதியில் இருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான இறுதிக் கடிதம் இன்று(30) ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று(29) கொழும்பில் கூடியது.
மருத்துவம், பல்கலைக்கழகம், வங்கி, பொறியியலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுநர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலும் வருமானம் பெறுகின்றவர்களிடம் வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட வரி திருத்தத்தை கண்டிக்கும் வகையில் 47 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு நிவாரணம் கோருவதும் இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.
31 May, 2023 | 07:38 PM
31 May, 2023 | 06:52 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS