நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

பொலிஸ், முப்படையினரின் பாதுகாப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன

by Staff Writer 29-03-2023 | 9:16 AM

Colombo (News 1st) முத்துராஜவெல மற்றும் கொலன்னாவ முனையங்களில் இருந்து இன்று(29) காலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் முப்படைகளின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.