சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இம்மாதத்தில் 125000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

by Staff Writer 28-03-2023 | 9:00 AM

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 335000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தின் கடந்த 27 நாட்களுக்குள் 125000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.