பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

by Staff Writer 25-03-2023 | 7:16 PM

Colombo (News 1st) பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி C.D.விக்ரமரத்ன ஓய்வுபெறவிருந்தார். 

2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக C.D.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.