தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவிப்பு

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2023 | 7:45 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இன்று (24)  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வரிக்கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் இதுவரை நடைபெறாமையினால் அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்