முட்டை கப்பல் நாட்டை வந்தடைந்தது

முட்டை கப்பல் நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 23-03-2023 | 2:04 PM

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளின் முதற்தொகுதி இன்று(23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

முட்டைகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 03 நாட்கள் கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.